Wednesday, April 29, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைகள் கட்டப்பட்ட நிலையில் வயோதிபரின் சடலம் மீட்பு

கைகள் கட்டப்பட்ட நிலையில் வயோதிபரின் சடலம் மீட்பு

கந்தானை – வெலிகம்பிட்டிய பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜா-எல பகுதியை சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் முகம் மற்றும் கழுத்து பகுதி துணியொன்றினால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மகள் வழங்கிய தகவலுக்கு அமையவே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles