Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாடு சென்றார் ஜனாதிபதி

வெளிநாடு சென்றார் ஜனாதிபதி

சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (23) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், கடன் மறுசீரமைப்பு செயல்முறை, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பல விடயங்கள் குறித்து சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி எதிர்வரும் 27ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles