Friday, October 31, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரை சொகுசு பேருந்து சேவை தொடர்பான தீர்மானம்

அரை சொகுசு பேருந்து சேவை தொடர்பான தீர்மானம்

அரை சொகுசு பயணிகள் பேருந்து சேவை அனுமதிகள் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் வேறு சேவைக்கு மாற்றியமைக்கப்பட வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் குறிப்பிட்ட திகதிக்குப் பின்னர் அரை சொகுசுப் பயணிகள் பேருந்து சேவையை இரத்து செய்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

அரை சொகுசு பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவையை இரத்து செய்வதற்காக அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட கொள்கை தீர்மானத்தின் பிரகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்படும் பயணிகள் போக்குவரத்துக்கான அரை சொகுசு பேருந்து சேவை அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் உரிய அனுமதி பெற்றவர்களின் சம்மதத்துடன் மற்றும் ஒரு சேவைக்காக மாற்றி அமைக்கப்படும் என குறித்த அனுமதி பெற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles