Friday, October 31, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிறகு தேட சென்ற நபர் மாயம்

விறகு தேட சென்ற நபர் மாயம்

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாவா எலிய காட்வத்த வனப்பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் வீடு திரும்பாததையடுத்து, குடும்பத்தினர் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அவர் விறகு தேடுவதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளதுடன், அப்பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

நேற்று (21) நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த நபரைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமற்போன நபருடையது என சந்தேகிக்கப்படும் ஒரு ஜோடி காலணி மற்றும் உடை வனப்பகுதியில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போன நபர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

உத்தியோகபூர்வ பொலிஸ் நாய்களை பயன்படுத்தி மேலதிக தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles