ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் புத்தளம் பகுதியில் நடாத்திச் செல்லப்பட்ட அல் சுஹரியா மத்ரசா பாடசாலையில் மாணவர்களுக்கு போதனை வழங்கிய குற்றச்சாட்டில் கைதான இருவர் உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நால்வரும் நேற்றைய தினம் கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.