Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்ரசா பாடசாலையில் போதனை வழங்கிய ஆசிரியர்கள் விளக்கமறியலில்

மத்ரசா பாடசாலையில் போதனை வழங்கிய ஆசிரியர்கள் விளக்கமறியலில்

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் புத்தளம் பகுதியில் நடாத்திச் செல்லப்பட்ட அல் சுஹரியா மத்ரசா பாடசாலையில் மாணவர்களுக்கு போதனை வழங்கிய குற்றச்சாட்டில் கைதான இருவர் உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் நேற்றைய தினம் கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Keep exploring...

Related Articles