தென் பசுபிக் சமுத்திரத்தின் பிஜி மற்றும் நிவ் கெலிடோனியா ஆகிய நாடுகளை அண்மித்த கடற்பரப்பில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவு கோளில் 7.7 மெக்னிடியுட்டாக நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நியுகெலிடோனியாவிலிருந்து 38 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வினை தொடர்ந்து நியுகெலிடோனியா மற்றும் வனவாட்டு ஆகிய நாடுகளில் கடல் அலையின் வேகம் மற்றும் உயரம் சிறிதளவு அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.