Sunday, May 11, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் தனியார் பேருந்து சேவைகள்

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் தனியார் பேருந்து சேவைகள்

ஒருநாள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தயாராவதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் இருந்து, அதிகளவு புகை வெளியேறுவது தொடர்பில், மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இந்த சோதனை நடவடிக்கைகள் உனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஒருநாள் சேவைப் பணிபுறக்கணிப்பில் ஈடுபட உள்ளோம்.

நாட்டில் உதிரிப் பாகங்கள் இல்லாதமையாலும், அவற்றின் விலை உயர்வு காரணமாகவும், பேருந்துகள் அதிகளவில் புகையினை வெளியிடுகின்றன.

இலங்கையில் தரமற்ற டீசல் விற்பனை செய்யப்படுகின்றது.

அவ்வாறு விற்பனை செய்யப்படுவதால், வாகனத்தில் அதிகளவான புகை வெளியேற்றப்படுகிறது என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles