Saturday, September 13, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமஹிந்த - பவித்ரா- ரோஹித மீதான பயணத்தடை நீக்கம்

மஹிந்த – பவித்ரா- ரோஹித மீதான பயணத்தடை நீக்கம்

2022 மே 9 தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜயரத்ன ஆகியோரின் வெளிநாட்டு பயணத்தடையை முழுமையாக நீக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னரே இந்த உத்தரவு வழங்கப்பட்டது.

குறித்த உத்தரவை குடிவரவு திணைக்கள நாயகத்திற்கு அனுப்பி கடவுச்சீட்டுகளை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles