இந்த ஆண்டுக்கான நெல் அறுவடை முடியும் வரை தற்போது கையிருப்பில் உள்ள அரிசியை கால்நடை தீவனத்திற்கு பயன்படுத்த பரிந்துரைகளை வழங்க வேண்டாம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக குறிப்பிடப்படுகின்றது.
2021 மஹா பருவத்தில் இரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் சோளச் செய்கையின் விளைச்சல் 90,000 மெற்றிக் டன்களாகக் குறைவடைந்தது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், கால்நடை தீவனத்திற்கான சோளத்திற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், கையிருப்பில் உள்ள அரிசி மற்றும் நெல் ஆகியவற்றை யால பருவம் வரை கால்நடை தீவனத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.