Sunday, February 8, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுவைத்திலிருந்து 32 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

குவைத்திலிருந்து 32 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

குவைத்துக்கு பணிப் பெண்களாகச் சென்று அந்நாட்டின் சட்டங்களை மீறி தங்கியிருந்த 32 இலங்கை பெண்கள், இன்று (16) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடத்தையோ அல்லது வீட்டையோ விட்டு வெளியேறி வேறு இடங்களில் பணிபுரிந்த நிலையில் சொந்த விருப்பப்படி இலங்கை திரும்புவதற்காக தூதரகத்தில் தம்மைப் பதிவு செய்தவர்களே இவ்வாறு நாடு திரும்பினர்.

இவர்கள் அநுராதபுரம், வவனியா, கம்பஹா, கிண்ணியா, கொழும்பு, குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles