ராஜகிரிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சொத்துக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பெண் ஒருவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் திடீரென உயிரிழந்துள்ளார்.
வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பதுளை – தெமோதர பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய குறித்த பெண், வீட்டின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கைது செய்யப்பட்டு வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.
தமக்கு சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக கூறியதை அடுத்து குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.