Wednesday, November 12, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகணவனை கொன்றதாக 33 வருடங்களின் பின்னர் ஒப்புக்கொண்ட மனைவி

கணவனை கொன்றதாக 33 வருடங்களின் பின்னர் ஒப்புக்கொண்ட மனைவி

33 வருடங்களுக்கு முன்னர் தனது தாயும் தாயின் சட்டரீதியற்ற கணவரும் இணைந்து தனது தந்தையை கொலை செய்ததாக நபர் ஒருவர் ஊருபொக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தற்போது வலதுகுறைந்துள்ள தாய், நான் செய்தது பாவம் என தனது சொந்த சகோதரியிடம் கூறி கொலையை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதற்கமைய, அவரது மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தததுடன், தனது தந்தை கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கழிவறை குழியையும் அவர் பொலிஸ் அதிகாரிகளிடம் அடையாளம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனையடுத்து, ஊருபொக்க பொலிஸ் நிலையத்தினர், நீதிமன்றில் அறிவித்துள்ளதோடு, உடல் எச்சங்கள் இன்று (15) நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles