மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் வகையில் இந்த வருடத்தின் அடுத்த ஆறு மாதங்களில் பல்வேறு துறைகளுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எஹெலியகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் காளான் வளர்ப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கடந்துள்ள காலப்பகுதியானது எமது நாட்டு மக்கள் கடந்து வந்த மிகக் கடினமான காலகட்டமாகும்.
அத்துடன், அரச ஊழியர்களுக்கு சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.