பிரான்சில் நடைபெற்று வரும் உலக இராணுவ முத்தரப்பு சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் சென்ற இலங்கை அணி வீரர்கள் 7 பேர் போட்டியின் போது தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
22 நாடுகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுவரும் இந்தப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 13 பேர் கொண்ட ஆயுதப்படையினர் குழு மே 4ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டது.
கடற்படைத் தளபதி லக்மால் வீரக்கொடி இந்த அணியின் தலைவராகவும், மற்ற 12 பேரும் மற்ற தரவரிசையில் இருந்துள்ளனர்.
அத்துடன், இந்தக் குழுவில் ஐந்து பெண் வீராங்கனைகள் இருந்தனர்.
போட்டிகள் மே 5ஆம் திகதி ஆரம்பமானதுடன், இந்த அணிக்கு பொறுப்பான கடற்படை அதிகாரி அனைவரின் விமான அனுமதிப்பத்திரத்தையும் தன்வசம் வைத்திருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குறித்த அதிகாரி உணவு வாங்க சென்றபோது, பையில் இருந்த கடவுச்சீட்டுகளை திருடிய 7 பேர் தங்கியிருந்த இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
தப்பிச் சென்றவர்களில் இராணுவத்தைச் சேர்ந்த 4 பேரும், விமானப்படையைச் சேர்ந்த இருவர் மற்றும் கடற்படையைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சுக்கு நேற்று (11) அறிவிக்கப்பட்டது.
இந்த நாட்டில் தங்கி வேலைக்குச் செல்லும் நோக்கில் அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இதற்கு முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால்இ விமான அனுமதிச் சீட்டுகள் அதிகாரி வசமே இருப்பதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் ‘அருணா’விடம் தெரிவித்தார்.