நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.
இதன்படி மே 13ஆம் திகதி முதல் செப்டெம்பர் 23ஆம் திகதி வரை அவர் வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் நீதவான் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.