அடுத்த சில மாதங்களில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடம் 32,600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையாகும் என அதன் நிபுணர் வைத்தியர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மேல் மாகாணத்தில் 50 வீதமான டெங்கு நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை 16 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.