திருகோணமலை சீனன்குடாவிலிருந்து சீதுவைக்கு கோதுமை மா ஏற்றிச் சென்ற ரயிலொன்று இன்று(12) அதிகாலை மஹவ பகுதியில் தடம்புரண்டது.
இதனால் கிழக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தாமதமடைந்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புலதிசி நகர்சேர் கடுகதி ரயில் மற்றும் மஹவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில்கள் தாமதமடைந்துள்ளன.