ஒரு நாள் அல்லது நேரத்தை ஒதுக்கிய பின்னர் மட்டுமே, கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருமாறு பொது மக்களிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
நாள் அல்லது நேரத்தை ஒதுக்காதவர்கள் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருவதனை தவிர்க்குமாறு குறித்த திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல உள்ளவர்கள் மற்றும் இரண்டு அல்லது மூன்று வார விடுமுறையில் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்து, கடவுச்சீட்டை தயார்ப்படுத்திக்கொள்ள உள்ளவர்கள் அதற்கான உரிய ஆவணங்களை காண்பித்து கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.