தலசீமியாவைத் தடுப்பதில் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடப் பிரிவின் குழந்தை மருத்துவப் பேராசிரியர் கலாநிதி சச்சித் மெத்தானந்தா தெரிவித்துள்ளார்.
நாட்டின் சனத்தொகையில் 3 வீதமானோர் தலசீமியா நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய நாடுகள் தலசீமியாவைக் கட்டுப்படுத்திய போதிலும் இலங்கையால் இன்னும் தலசீமியாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என பேராசிரியர் சச்சித் மெத்தானந்தா கூறுகிறார்.