கோழிப்பண்ணை தொழில்துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து முட்டை தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, தெரிவித்துள்ளார்.
பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, அனைத்து பங்கேற்பாளர்களும் இணைந்து செயற்பட ஒப்புக்கொண்டனர்.
அமைச்சின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டது.
முட்டை பண்ணை உரிமையாளர்கள் சங்கம், வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு, விவசாய அமைச்சு, கால்நடை அபிவிருத்தி அமைச்சு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.