Thursday, March 26, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெஹிவளை கொலைச் சம்பவம்: 14 பேர் கைது

தெஹிவளை கொலைச் சம்பவம்: 14 பேர் கைது

தெஹிவளை பகுதியில், நேற்றிரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு, தெஹிவளை பகுதியில் உள்ள குளிரூட்டி திருத்தும் நிலையம் ஒன்றில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிலையத்துக்குள், பலவந்தமாக நுழைய முற்பட்டதாக கூறப்படும் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 27 வயதான ஒருவர் மரணித்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸ் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles