தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கமானது வட அகலாங்கு 8.80N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 88.90E இற்கும் இன்று (10) காலை 08.30 மணியளவில் மையம் கொண்டிருந்தது.
இது அடுத்த சில நாட்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு சூறாவளி புயலாக வலுவடைந்து, பின்னர் தென்கிழக்கு மற்றும் அதை அண்மித்த மத்திய வங்கக்கடலில் தீவிர புயலாக மாறும் என்று கூறப்படுகிறது.
இதனால் வட அகலாங்குகள் 02N இற்கும் 15N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 85E இற்கும் 100E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக காலியில் இருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பயணம் செய்வோர் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.