2015ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணியாற்றிய இளைஞரை கடத்திச் சென்று தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணை இன்று (09) ஆரம்பமானது.
இந்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் நடைபெற்றது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் அமில பிரியங்க அமரசிங்க இதன்போது சாட்சியமளித்தார்.
பின்னர் அடுத்த சாட்சி விசாரணையை ஜூன் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விசாரணையின் போது பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திரவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.