Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண்ணொருவர் கொலை: இருவர் கைது

பெண்ணொருவர் கொலை: இருவர் கைது

பாதுக்கை, வட்டரெக்க பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் கட்டிட பணியாளர் ஒருவருடன் வசித்து பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண் குறித்த கட்டிட பணியாளரின் முன்னாள் மனைவி என்றும் மற்றயவர் அவரின் தம்பி என்றும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் கட்டிட பணியாளரை விவாகரத்து செய்து சுமார் மூன்று வருடங்கள் ஆவதாகவும் அதனால் தான் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்ததாகவும் கட்டிட பணியாளர் வழங்கிய சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (09) காலை குறித்த கட்டிட பணியாளர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் சந்தேக நபர்களான முன்னாள் மனைவியும் அவரது தம்பியும், வீட்டிற்கு சென்று கொலையுண்ட பெண்ணிடம் பேசி, வீட்டிற்கு வெளியே அழைத்து வந்து கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வலஸ்முல்ல, கட்டுவன, அலுபொத்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த விவாகரத்துப் பெற்ற 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles