ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (9) இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆக்கப்பூர்வமாக நாம் அரசாங்கத்தோடு பேசி முடிவெடுக்கத் தயார்.
வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் சரித்திரபூர்வமான வாழ்விடங்கள் என்ற அடிப்படை சர்வதேச ரீதியாகவும் நாட்டுக்குள்ளேயும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரே அலகாக உருவாக்கப்பட்டது.
அந்த அடிப்படைக்கு மாறாக எந்த பேச்சு வார்த்தையிலும் ஈடுபட நாம் தயாராக இல்லை என்பதுடன் மேற்சொன்ன அடிப்படையில்தான் மே மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபற்றுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.