உள்ளூர் சந்தையில் சீனியின் விலை அதிகரிப்பு தொடர்பில் அறிக்கை ஒன்றைத் தயாரிக்குமாறு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
டொலரின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சீனிக்கான விலை அதிகரிப்புக்கான சாத்தியக் கூறுகள் இல்லை என நிதியமைச்சின் அறிக்கையொன்றில் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி காரணமாக கோதுமை மாவின் விலையையும் அதிகரிக்க முடியாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி 13 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், கோதுமை மாவின் விலை உலக சந்தையில் 15 வீதத்தால் குறைந்துள்ளது எனவே விலை அதிகரிப்பு சாத்தியமில்லை எனவும் தெரிவித்தார்.