நேற்று (08) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் வான்கல புஸ்ஸதேவ கடற்படை முகாமின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வான்கல கடற்பரப்பில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பரப்பில் வைத்து இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
10 வோட்டர் ஜெல் வெடிபொருட்கள், 18 மின்சாரம் சாராத டெட்டனேட்டர்கள், இரண்டரை அடி சர்வீஸ் டியூப் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.