மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் லங்கா ஐஓசி நிறுவன அதிகாரிகளுக்கு இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இலங்கையின் பெற்றோலியத் துறை தொடர்பான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக எரிபொருள் விலை சூத்திரம், புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவுதல், எரிபொருள் விநியோகம், CPSTL இன் வசதிகளை விரிவுபடுத்துதல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
