Thursday, February 12, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் பதுக்கை பிரதேச செயலகம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி மற்றும் எஹலியகொட பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதிர தெரிவித்துள்ளார்.

இன்று (27) இரவு 8 மணி வரை அமுலில் இருக்கும் நிலை 1 மண்சரிவு எச்சரிக்கையின் கீழ் அப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சேனாதிரா தெரிவித்தார்.

மழை அதிகரித்தால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles