ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக இன்று (26) குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குறைந்த விலைக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கம் நஷ்டம் ஈட்டியதாக குற்றம் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தமக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களையும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழங்கவில்லை என பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்ததையடுத்து, வழக்கை எதிர்வரும் ஜூன் 16ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.