சிங்கள புத்தாண்டு காலம் நிறைவடைந்துள்ள நிலையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வரும் பெரும்பாலான மரக்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அனைத்து பழங்கள் மற்றும் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதன்படி இன்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கோவா 80 – 100 ரூபாவாகவும், போஞ்சி 90 – 110 ரூபாவாகவும், கரட் 90 – 110 ரூபாவாகவும், தக்காளி 70 – 80 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.