களுத்துறை – பண்டாரகம தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில், குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநரை பண்டாரகம பொலிஸார் நேற்று (25) கைது செய்துள்ளனர்.
உரிய இடத்துக்கு முன்னதாகவே பயணிகளை இறக்கிவிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக, குறித்த பயணிமீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரகம – கோனதூவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.