Friday, June 6, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆசிரியர் ஆட்சேர்ப்பில் ஆங்கிலம் கட்டாயமாக்கப்படும்

ஆசிரியர் ஆட்சேர்ப்பில் ஆங்கிலம் கட்டாயமாக்கப்படும்

எதிர்வரும் 10 வருடங்களுக்குள் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆங்கிலக் கல்வியை வழங்குவதற்கும், ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் ஆங்கிலத்தைக் கட்டாயமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புவியியல், வரலாறு போன்ற பாடங்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், தற்போது உயர்தரப் பாடங்கள் கற்பிக்கப்படும் அனைத்துப் பாடசாலைகளும் இணையத்துடன் இணைக்கப்படும் எனவும், அதன் பின்னர் கல்விப் பொதுத் தரம் வரையிலான அனைத்துப் பாடசாலைகளும் இணையத்துடன் இணைக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாத்தறை ராகுல கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று (25) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles