வரக்காபொல பிரதான தபால் நிலையத்தில் 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான முத்திரைகள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் வரக்காபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 21ஆம் திகதி இரவு யாரோ ஒருவர் ஜன்னலை உடைத்து உள்நுழைந்து அங்கிருந்த 1,70,000 ரூபாய்க்கும் அதிகமான முத்திரைகளையும், சுமார் 9 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தபால்மா அதிபர் நேற்று (24) வரகாபொல பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.