Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உலகம்பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் பலி

பயங்கரவாத தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் பலி

காஷ்மீர் – இமயமலைப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் மேலும் பல இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடும் மழை மற்றும் பனிமூட்டமான காலநிலை நிலவிய நிலையில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை இலக்கு வைத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத பயங்கரவாத குழுவினால் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் இந்திய பாதுகாப்பு படையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles