2019 முதல் இந்த ஆண்டு மார்ச் வரை, குறைந்தது 49,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு குஜராத் மாநிலத்தில் வசிப்பவர்கள் என்றும், ஒவ்வொரு நபரிடம் இருந்தும் 65,000 யூரோக்களை கடத்தல்காரர்கள் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
கனடா அல்லது மெக்சிகோவிற்கு போலி விசாவில் பயணிப்போருக்கு எல்லையை கடக்கும் போது 15 மீற்றர் சுவர்கள் மற்றும் முட்கம்பி தடைகள் ஊடாக செல்ல பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கடத்தல்காரர்களுக்கு கனமான பைகளுடன் ஓடவும், தண்ணீர் மற்றும் குறைந்த உணவை மட்டுமே உட்கொள்வதற்கும், குழந்தைகளுக்கு பால்மா மட்டுமே கொடுப்பதற்கும், இடம்பெயர்ந்தால் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைச் சமாளிக்கவும் பயிற்சி பெற்றுள்ளனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.