Monday, May 26, 2025
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகண் சொட்டு மருந்து தொடர்பில் ஆய்வு

கண் சொட்டு மருந்து தொடர்பில் ஆய்வு

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் நோய்க்காக பயன்படுத்தப்பட்டதன் பின்னர், பாதிப்புக்கள் ஏற்பட்டதாக கூறப்படும் ப்ரெட்னிசெலோன் சொட்டு மருந்தின் மாதிரி தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த ஒளடத்தின் தரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சொட்டு மருந்து 2021ம் ஆண்டு முதல் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருவதாக எமதுச் செய்தி சேவை மேற்கொண்ட ஆராய்வில் தெரியவந்துள்ளது.

அந்த சொட்டு மருந்தை பயன்படுத்திய நோயாளர்கள் சிலர் பல்வேறுப்பட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.

இதனையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ப்ரெட்னிசெலோன் என்ற கண் சொட்டு மருந்து தொகுதியை மாத்திரம் மீளப்பெறுமாறு சுகாதார அமைச்சு அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles