இன்று 8 மாவட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேற்கு, வடமேற்கு, வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பநிலை 39 முதல் 45 செல்சியஸ் வரை அதிகரிக்கலாம்.
அத்துடன், காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இன்று (21) சாதாரண வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.