யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையில் ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருந்த பயணிகள் படகு சேவை இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க மே 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த படகு சேவையை பராமரிக்க, குடியேற்ற அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகளை பணியமர்த்துவதற்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் இதர உபகரண வசதிகளை வழங்க அதிக கால அவகாசம் தேவைப்படுவதால், அதனை ஒத்திவைக்குமாறு இந்தியா தெரிவித்துள்ளது.