இலங்கை மின்சார சபையின் உத்தேச மறுசீரமைப்பு தொடர்பில் 31 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உத்தேச இலங்கை மின்சார சபையின் சீர்திருத்தக் கட்டமைப்பு, கொள்கைகள் மற்றும் வீதி வரைபடத்தை பிரதிநிதிகளுக்கு தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டிணைப்பு, பெருநிறுவனமயமாக்கல், மனிதவள முகாமைத்துவம் , பணியாளர் நலன்கள், அதிகப்படியான பணியாளர்களை நடத்துதல், நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் செயலக சீர்திருத்தங்களின் பங்கு பற்றிய திட்டங்கள் தொடர்பாக மேலும் விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன.