நிலவும் வெப்பமான காலநிலை இம்மாத இறுதி வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (20) அதிக வெப்பமான காலநிலை நிலவுவதாக அந்த திணைக்களத்தின் ஆராய்ச்சி மற்றும் காலநிலை மாற்ற பணிப்பாளர் அனுஷ வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.
அந்த மாகாணங்களுக்கு மேலதிகமாக மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இந்த வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.