Saturday, July 12, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கரவண்டி விபத்தில் மூன்றரை வயது குழந்தை பலி

முச்சக்கரவண்டி விபத்தில் மூன்றரை வயது குழந்தை பலி

கொடகம சந்தியில் இன்று (18) அதிகாலை 1.30 மணியளவில் மூன்று முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மடுலவ பிரதேசத்தைச் சேர்ந்த அபிரு கேசர என்ற குழந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தாய், தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுகேகொடையில் இருந்து மதுலவ பிரதேசத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles