Friday, June 13, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபண்ணை அம்மன் சிலை வழக்கு ஒத்திவைப்பு

பண்ணை அம்மன் சிலை வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் வைக்கப்பட்ட அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் முன்னிலையாகினார். ஏனைய பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகினர்.

சிலை வைப்பதற்கு தடையில்லை, எனினும், அனுமதி பெற்று சிலை வைக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

என்.சிறிகாந்தா, எம்.ஏ.சுமந்திரனின் வாதத்தையடுத்து, எதிர்வரும் மே 4ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles