Wednesday, November 26, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயிலில் தவறி வீழ்ந்து இரு கால்களையும் இழந்த இளைஞர்

ரயிலில் தவறி வீழ்ந்து இரு கால்களையும் இழந்த இளைஞர்

கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி சென்ற காலி குமரி ரயிலில் இருந்து ஒருவர் தவறி விழுந்ததில் அவரது இரு கால்களும் துண்டானதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதுடன், மிரிஸ்ஸ உடுப்பில பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த ரயில் காலி புகையிரத நிலையத்தை வந்தடைந்த போது, ​​அவர் தள்ளப்பட்டதில் ரயிலில் இருந்து தவறி விழுந்ததாக ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில் நின்றதும் அங்கிருந்தவர்கள் அவரை ரயில் நடைமேடைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் அதற்குள் அவரது இரண்டு கால்களும் முற்றிலும் துண்டாகி இருந்தாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவுகை வண்டி ஊடாக அவர் கராப்பிட்டிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles