கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி சென்ற காலி குமரி ரயிலில் இருந்து ஒருவர் தவறி விழுந்ததில் அவரது இரு கால்களும் துண்டானதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதுடன், மிரிஸ்ஸ உடுப்பில பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
குறித்த ரயில் காலி புகையிரத நிலையத்தை வந்தடைந்த போது, அவர் தள்ளப்பட்டதில் ரயிலில் இருந்து தவறி விழுந்ததாக ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில் நின்றதும் அங்கிருந்தவர்கள் அவரை ரயில் நடைமேடைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் அதற்குள் அவரது இரண்டு கால்களும் முற்றிலும் துண்டாகி இருந்தாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவுகை வண்டி ஊடாக அவர் கராப்பிட்டிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.