பிரான்சின் தெற்குப் பகுதியில் உள்ள மார்சேயில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஏழு மாடி கட்டிடம் வெடித்ததில், அருகில் இருந்த இரண்டு கட்டிடங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அந்த கட்டிடங்களில் இருந்த சுமார் 200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் வெடிப்புக்கு எரிவாயு கசிவு காரணமாக இருக்கலாம் என்று பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.