மன்னார் பேசாலை பகுதியில் காலை உணவாக வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பருப்பு கறியில் மரவட்டை இருந்தமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள்இ உணவகத்திற்கு சீல் வைத்து உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த வாடிக்கையாளர் வாங்கிய இரண்டு பராட்டாக்களை சாப்பிட கிடைத்த பருப்பு கறியில் இந்த மரவட்டை இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாட்டின் பிரகாரம், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையின் போதுஇ உணவகத்தின் தேங்காய் சம்பளிலும் பல பூச்சிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் மன்னார், பேசாலை பகுதிகளில் உள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் கடைகளிலும் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.