Friday, July 4, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉளவு பார்க்க தெய்வேந்திர முனையில் ரேடார் அமைக்கும் சீனா?

உளவு பார்க்க தெய்வேந்திர முனையில் ரேடார் அமைக்கும் சீனா?

இந்து சமுத்திரத்தில் உள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்க இராணுவ தளங்களை உளவு பார்ப்பதற்காக இலங்கையில் புதிய ரேடார் தளத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை உளவுத்துறை ஆதாரங்களால் வெளிப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பீஜிங் தனது பொருளாதாரப் பங்காளிகளின் கடனை மூலோபாய ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக நிபுணர்களால் கண்டனம் விடுக்கப்பட்டுள்ளது.

சீன அறிவியல் அகாடமியின் ஸ்பேஸ் இன்ஃபர்மேஷன் ரிசர்ச் ரிமோட் சாட்டிலைட் எர்த் ஸ்டேஷனை வடிவமைப்பதில் முன்னணியில் உள்ளது.

மேலும் ரேடார் தளம் தெய்வேந்திர முனைக்கு அருகில் உள்ள அடர்ந்த காடுகளில் நிறுவப்பட உள்ளது.

அந்த நிலை, இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் தனது உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளை சீனா பெரிதும் அதிகரிக்க அனுமதிக்கிறது.

இன்னும் தீவிரமா, டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய பாதுகாப்பு தளங்கள் மற்றும் இந்தியாவை உளவு பார்க்க சீனா தயாராகி வருகிறது.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்தியாவின் விண்வெளி நிலையம், ஒடிசாவில் உள்ள ஏவுகணை சோதனை எல்லை மற்றும் தீபகற்ப பகுதியில் உள்ள பல பாதுகாப்பு படை நிலைகள் அனைத்தும் கண்காணிப்பு மண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட தென்னிந்தியாவில் உள்ள மூலோபாய இடங்களுக்கு கூடுதலாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் இருப்பு மற்றும் இந்திய கடற்படையின் செயல்பாடுகளை கண்காணிக்க இந்த ரேடார் மையம் பயன்படுத்தப்படும் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு செல்லும் இந்திய கடற்படை கப்பல்களை ரேடார் மூலம் கண்காணிக்க முடியும் என்ற கவலை எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles