Friday, July 4, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கான தென்கொரிய தூதுவர் - ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் வூன்ஜின் ஜியோங் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இலங்கையில் தனது பதவிக்காலம் முடிவடைவதை உத்தியோகபூர்வமாக அறிவித்த வூன்ஜின் ஜியோங் ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

தென்கொரிய தூதுவர் தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கு ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி , எதிர்காலத்தில் அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்தினார்.

இதன்போது காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தனவும் கலந்துகொண்டார்.

வூன்ஜின் ஜியோங் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி முதல் இலங்கைக்கான தென் கொரிய தூதுவராக பணியாற்றி வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles