பேருந்து கட்டணத்தை எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் திருத்தம் செய்ய முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் கணிசமான அளவு குறையும் பட்சத்தில் ஜூலை மாதம் பேருந்து பயண கட்டணத்தை குறைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேநேரம்இ உதிரிப்பாகங்களின் விலையை குறைக்கும் பட்சத்தில், அதன் பலனை பயணிகளுக்கு வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.