சுவசெரிய நோயாளர் காவுகை வண்டி சேவையைத் தொடர 41 தனியார் அமைப்புகளும், செல்வந்தர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுவசெரிய அம்புலன்ஸ் சேவையானது வருடாந்தம் சுமார் நான்கு பில்லியன் ரூபாவை திறைசேரியிலிடமிருந்து பெற்றது.
எனினும் தற்போது அந்த சேவையை தொடர்வது சவாலாக மாறியுள்ளதாக சுவசெரிய அம்புலன்ஸ் சேவையின் பணிப்பாளர் சபை அண்மையில் தெரிவித்தது.
இந்த அம்புலன்ஸ்களை பராமரிக்க திறைசேரி பணம் வழங்காததால் சேவையை தொடர்வது சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சுவசெரிய மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர் சபையின் கூட்டு கலந்துரையாடலின் பின்னர் இதுவரை கிடைத்த ஐநூற்றி இருபத்தைந்து மில்லியன் ரூபா கிடைத்துள்ளது.