Sunday, June 8, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுவசெரிய சேவையை தொடர 41 தனியார் நிறுவனங்கள் ஆதரவு

சுவசெரிய சேவையை தொடர 41 தனியார் நிறுவனங்கள் ஆதரவு

சுவசெரிய நோயாளர் காவுகை வண்டி சேவையைத் தொடர 41 தனியார் அமைப்புகளும், செல்வந்தர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுவசெரிய அம்புலன்ஸ் சேவையானது வருடாந்தம் சுமார் நான்கு பில்லியன் ரூபாவை திறைசேரியிலிடமிருந்து பெற்றது.

எனினும் தற்போது அந்த சேவையை தொடர்வது சவாலாக மாறியுள்ளதாக சுவசெரிய அம்புலன்ஸ் சேவையின் பணிப்பாளர் சபை அண்மையில் தெரிவித்தது.

இந்த அம்புலன்ஸ்களை பராமரிக்க திறைசேரி பணம் வழங்காததால் சேவையை தொடர்வது சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சுவசெரிய மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர் சபையின் கூட்டு கலந்துரையாடலின் பின்னர் இதுவரை கிடைத்த ஐநூற்றி இருபத்தைந்து மில்லியன் ரூபா கிடைத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles